Showing posts with label காதல் வேதம். Show all posts
Showing posts with label காதல் வேதம். Show all posts

January 18, 2010

தமிழ் பாப் பாடல்கள் Vs சினிமா பாடல்கள்

தமிழ் பாப் பாடல்கள் தமிழர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டதாக இல்லை என்று தான் என்னைக்கேட்டால் சொல்வேன்.

ஆனால் ALISHA வின் MADE IN INDIA, Michael Jackson ன் Dangerous, Shakira வின் Hips Don't Lie போன்ற வேற்று மொழி பாப் பாடல்கள் தமிழர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டும் அறியப்பட்டும் வந்திருக்கிறது என்பேன்.

இவற்றிற்கு காரணம் தமிழ் சினிமாப் பாடல்களின் மீதுள்ள ரசிகர்களின் அதீத கவர்ச்சியும் தமிழ் பாப் இசை தொகுப்புகள்(albums) சரியாக விளம்பரப்படுத்தப்படாமையுமே காரணமாக இருக்கக்கூடும்.

தமிழில் விதிவிலக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டும், ரசிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

அதற்கு காரணம் அதனை தயாரித்த பரத்பாலா மற்றும் கனிகா செய்த விளம்பரங்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. அதோடு தேசம் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதாலும் ஐம்பதாவது சுதந்திர தின விழாக்காலத்தை ஒட்டி அதன் வெளியீடு இருந்ததாலும் மட்டுமே இத்தனை புகழ் பெற்றது.

வந்தே மாதரம் இசைத் தொகுப்பின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் அவர்களின் இசையும் பெரும் காரணம் என்றாலும் அதற்கு பின்னர் அவர் வெளியிட்ட பாம்பே ட்ரீம்ஸ், வந்தே மாதரம் அளவிற்கு புகழ் பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இணையத்தில் தமிழ் பாப் பாடல்களை பகிர்ந்து கொண்டால் தமிழர்கள் பலர் அறியக்கூடும் என்பதால் தமிழ் பாப் பாடல்களை தொகுக்க என்னாலான சிறு முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்.

http://thamizhpopsongs.blogspot.com/ என்ற வலைப்பூவில் சில தமிழ் பாப் பாடல்களை  கேட்கலாம். உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி.

November 19, 2008

ஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்

பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை youtube வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.


கண்ணில் என்னென்ன மயக்கம்


நீ என்பதில் நானும் அடங்கும்


நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா


மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்


இரு கண்ணும் தூங்காமலே


அழகான காதல் நிலா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
Related Posts with Thumbnails