ஆசஸ்(Ashes) என அழைக்கப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ['இந்த கதையெல்லாம் வாணாம் நீ சொல்ல வர பண்பற்ற செயல் இன்னாதான்னு' கேட்பவர்கள் நேரடியாக கடைசி இரு பத்திகளைப் பார்க்கவும் :) ]
அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் கடந்த புதன் கிழமை 8 ஆம் தேதி தொடங்கி நேற்று 12 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நூறாவதாக அறிமுகப்படுத்தப்படும் மைதானம் என்ற புகழை கார்டிஃப் மைதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸில் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடப்பதும் இதுவே முதன்முறையாக இருக்கும் என கருதுகிறேன்.
முதல் இன்னிங்சில் மிக மோசமான தொடக்கத்தை அளித்த இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாகவே ஆடினர். மாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 674 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்கள் முன்னணியும் பெற்று இருந்தது.
இறுதி நாளில் இரண்டாவது இன்னிங்சில் 127 ஓட்டங்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த இங்கிலாந்தை 'காலிங்க்வுட்' தனது தனித்திறமையால் 245 பந்து வீச்சுகளை (40 ஓவர்கள்)சமாளித்து தோல்வியை தவிர்க்க முயற்சித்தார். 11 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பதாவதாக அவரது விக்கெட்டும் வீழவே ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தது.எனினும் இறுதி விக்கெட் இணையான ஆண்டர்சனும், பேனசரும் கடைசி 11 ஓவர்களையும் சமாளித்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்டனர்.

ஆட்டம் முடிய இறுதி 20 நிமிடங்களும் 5 ஓவர்களும் வீசப்பட வேண்டிய நிலை இருக்கின்ற போது இங்கிலாந்து அணியினர் நேரத்தை கடத்துவதெற்கென்றே கை உறைகளை (Gloves) மாற்றும் முயற்சியாக பெவிலியனிலிருந்து பன்னிரெண்டாவது ஆட்டக்காரரை கை உறையுடன் உள்ளே அனுப்பினர்.ஒரு முறை தானே என்று பார்த்தால் அந்த ஓவர் முடிவடைந்த பின்னர் மறுபடியும் அவர் கை உறைகளுடன் உள்ளே நுழைகிறார். இந்த முறை அவர் பின்னால் இங்கிலாந்து அணியின் physio வும் தனது பையுடன் நுழைகிறார்; இத்தனைக்கும் மைதானத்தில் இருந்த மட்டை வீச்சாளர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அப்போது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பாண்டிங்கின் முகத்தில் அத்தனை கோபம், அத்தனை எரிச்சல்; இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது நேரத்தைக் கடத்தினால் தோல்வியிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கிரிக்கெட் பண்பற்ற, கேவலமான செயலாகவே இது படுகிறது. இத்தகைய பண்பற்ற செயல்கள் மூலம் வெற்றி பெற அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்க விளையாடுபவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடிந்தாலும் அது முறையான வெற்றியாகாது.அது ஒரு பண்பான அணிக்கோ, ஆட்டக்காரனுக்கோ அழகுமல்ல.
அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டம் வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் கடந்த புதன் கிழமை 8 ஆம் தேதி தொடங்கி நேற்று 12 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நூறாவதாக அறிமுகப்படுத்தப்படும் மைதானம் என்ற புகழை கார்டிஃப் மைதானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸில் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடப்பதும் இதுவே முதன்முறையாக இருக்கும் என கருதுகிறேன்.
முதல் இன்னிங்சில் மிக மோசமான தொடக்கத்தை அளித்த இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமாகவே ஆடினர். மாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 674 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்கள் முன்னணியும் பெற்று இருந்தது.
இறுதி நாளில் இரண்டாவது இன்னிங்சில் 127 ஓட்டங்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த இங்கிலாந்தை 'காலிங்க்வுட்' தனது தனித்திறமையால் 245 பந்து வீச்சுகளை (40 ஓவர்கள்)சமாளித்து தோல்வியை தவிர்க்க முயற்சித்தார். 11 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பதாவதாக அவரது விக்கெட்டும் வீழவே ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தது.எனினும் இறுதி விக்கெட் இணையான ஆண்டர்சனும், பேனசரும் கடைசி 11 ஓவர்களையும் சமாளித்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்டனர்.
ஆட்டம் முடிய இறுதி 20 நிமிடங்களும் 5 ஓவர்களும் வீசப்பட வேண்டிய நிலை இருக்கின்ற போது இங்கிலாந்து அணியினர் நேரத்தை கடத்துவதெற்கென்றே கை உறைகளை (Gloves) மாற்றும் முயற்சியாக பெவிலியனிலிருந்து பன்னிரெண்டாவது ஆட்டக்காரரை கை உறையுடன் உள்ளே அனுப்பினர்.ஒரு முறை தானே என்று பார்த்தால் அந்த ஓவர் முடிவடைந்த பின்னர் மறுபடியும் அவர் கை உறைகளுடன் உள்ளே நுழைகிறார். இந்த முறை அவர் பின்னால் இங்கிலாந்து அணியின் physio வும் தனது பையுடன் நுழைகிறார்; இத்தனைக்கும் மைதானத்தில் இருந்த மட்டை வீச்சாளர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அப்போது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பாண்டிங்கின் முகத்தில் அத்தனை கோபம், அத்தனை எரிச்சல்; இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாவது நேரத்தைக் கடத்தினால் தோல்வியிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கிரிக்கெட் பண்பற்ற, கேவலமான செயலாகவே இது படுகிறது. இத்தகைய பண்பற்ற செயல்கள் மூலம் வெற்றி பெற அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்க விளையாடுபவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடிந்தாலும் அது முறையான வெற்றியாகாது.அது ஒரு பண்பான அணிக்கோ, ஆட்டக்காரனுக்கோ அழகுமல்ல.

