March 26, 2012

உலகம் எத்தனை விந்தையானது!!!


உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

உலகம் நாடக மேடையாம்
நாடகமே உலகமாயிருப்பதாக படுகிறது இன்று

உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உரைப்பவர் அரிதே இன்று

உன்னதமான அன்பை
உதறித் தள்ளும் உலகம் இன்று

உயிரின் விலை அறியாதார்
உடலின் விலை பேசி திரிகிறார் இன்று

உறவுகளை மதியாதார்
உரிமைகளை குறித்து வினவுகிறார் இன்று

உலகம், சுற்றுவதாலோ என்னமோ - மனிதர்
உள்ளொன்று வைத்து புறமொன்று உரைக்கின்றனர் இன்று

உள்ளதைச் சொன்னால் - இல்லை
உன் வாதம் பொய் என்கின்றனர் இன்று

உணர்ச்சிகளுக்கு விலையில்லை
விலைக்கு தான் உணர்ச்சிகள் இன்று

உருவம் பெரிதாகிப் போக
உண்மை சிறிதாகிப் போனது இன்று

உள்ளார்ந்த நேசம் வலிதல்ல
உலகார்ந்த வேஷம் வலிது இன்று

உலகம் தான் எத்தனை விந்தையானது - ஒருபுறம்
உயிர்கள் ஜெனிக்க - மறுபுறம்
உயிர்கள் மரிக்க - உயிரிருந்தும்
உடலளவில்  மனிதர்  மரிக்க

உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

March 10, 2012

ஏதோ ஒரு வெற்றிடம்


என் வேதனையும் சஞ்சலமும்
என்னோடு மரிக்கட்டும்

என் பெலன் என்னை விட்டுப் போனது
என் ஜீவன் அங்கலாய்க்கிறது

என் எலும்புகள் 
என்னை உருக்குகிறது

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

என் நீதி நியாயங்கள் 
என்னையே பரிகசிக்கின்றன.

என் மனசாட்சி
என்னை ஏளனமாய் பார்க்கிறது

ஏதோ ஒரு வெற்றிடம்
என்னுள்ளில் 

என்று மாறுமோ இந்த
எளியவனின் பாடுகள் 

என்று கேட்கப்படுமோ
என் கதறல்கள் 

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது
Related Posts with Thumbnails