October 09, 2008

அணுசக்தி ஒப்பந்தமும் தீபத்திருவிழாவும்

இறுதியாக அணு சக்தி ஒப்பந்தம் தனது இறுதி வடிவம் பெற்றுள்ளது, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவர்களின் கையெழுத்தோடு.மூன்று ஆண்டு கால முயற்சிகளுக்குப் பின்னர் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் சிங் அப்பாடா இப்போதாவது கையெழுத்தாகியதே என பெருமூச்சு விட்டுருப்பார் என்பதில் ஐயமில்லை.பிரதமரின் உறுதியான மனதிற்கு அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.ஜார்ஜ் புஷ் மட்டும் சளைத்தவரல்ல, அவரது கட்சியினரிடையே இருந்து வந்த எதிர்ப்புகளையும் எதிர்க் கட்சியினரின் சவால்களையும் சமாளித்து அற்புதமான அணுகுமுறையினால் செனட்டிலும், அமெரிக்க அரசியல் பிரதிநிதிகளின் குழுவிலும் கலந்துரையாடி முடித்துக் கொடித்துள்ளார்.
கையெழுத்திடுகிற நிகழ்விலே இந்தியா மற்றும் அமெரிக்க நல்லுறவை புகழ்மாலையால் சூட்டியிருக்கிறார். இரு நாடுகளின் ஆரம்ப காலங்களையும், காலனி ஆதிக்கம் அடைந்திருந்ததையும் அதன் பின்னர் அடைந்த முன்னேற்றங்களையும் குறிப்பிட்டு பேசியிருப்பது வரவேற்பிற்குரியது.இனி இந்தியாவின் கரங்களில் தானிருக்கிறது அணுசக்தியினை எவ்விதம் பயன்படுத்துவது என்பது.பேச்சின் இறுதியில் இந்தியருக்கு தீபத்திருவிழா வாழ்த்தும் சொல்லி பலரது புருவத்தை உயர்த்தி இருக்கிறார் ஜனாதிபதி புஷ். புஷ் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவர் தான்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails