December 09, 2008

ஈத் பெருநாளில் பகுதியளவே மகிழ்ச்சி-அமீர்கான்

ரங்க்தே பசந்தி உள்ளிட்ட நாட்டுப்பிரச்சினைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில் நடித்த ஹிந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் இன்று பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அளித்த பேட்டியில் பல உண்ர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவரளித்த பேட்டியின் ஒருசிலபகுதியின் தமிழாக்கம் இங்கே.(முன்னரே சில இஸ்லாம் அமைப்புகள் வேண்டிக்கொண்டபடி மும்பையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புத்துணி அணிந்திருந்தார்)

ஈத் பெருநாளாகிய இன்று எனக்கு முழுமையான மகிழ்ச்சியில்லை; பகுதியளவே மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

மும்பையின் தாக்குதலுக்கு பின்னான இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.எத்தகைய நேரத்திலும் குறிப்பாக இது போன்ற நேரங்களில் ஏறெடுத்துப்பார்க்கும் படியான;மக்கள் நம்பிக்கை வைக்கும் படியான அரசியல் வாதிகள் தற்போது இந்தியாவில் யாருமில்லை.

இந்திய அரசியல்கட்சிகள் வரும் தேர்தல்களில் தங்களை புதுப்பிக்க வேண்டும்;திறமை வாய்ந்த வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்; இளைஞர்கள் அரசியலிற்கு வருவதையும் ஆதரிக்கிறேன்.இன்று ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பின்னாட்களில் திருந்துவார்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

மேலும் அரசியல்வாதிகளை மாத்திரம் குறை கூறவும் முடியாது. அவர்களும் நம்மில் ஒருவரே;அவர்கள் ஜூபிடர் கோளில் இருந்தோ வேற்று கிரகங்களிலிருந்தோ வந்துவிடவில்லை. நாம் தான் அவர்களை தேர்தெடுத்தோம்;இப்போது நாமே குறையும் கூறுகிறோம். எனவே தேர்ந்தெடுத்த நாமும் குறைகூறப்படவேண்டியவர்கள் தான்.

இந்தியர் ஒவ்வொருவரும் முதலில் அவரவர் வாழ்க்கையை சீர்திருத்த வேண்டும்;அவரவர் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்; அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே நம் நாட்டை நாம் சீர்திருத்த முடியும். அதன் பின்னர் பிறரை குறை கூறுவோமானால் அது தகும்.

மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதல் நடத்துவது துரதிருஷ்டமானது. அவ்வாறு செய்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் பெயரை சொல்லவே தகுதியற்றவர்கள். தீவிரவாதத்திற்கு மதமில்லை என்றே கருதுகிறேன்.அண்டை நாடான பாகிஸ்தானை மொத்தமாக குறை கூறுவதும் சரியல்லவே;ஏனென்றால் அவர்களும் தீவிரவாததிற்கு பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிலிருக்கும் சில அமைப்புகள் தான் தீவிரவாதத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். எனவே உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடுவது வேண்டியதாக இருக்கிறது. ஏற்கெனவே உலகின் பல நாடுகளும் ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியே;பாகிஸ்தானும் ஆதரவு கை நீட்டியிருப்பது வரவேற்கப்படவேண்டியது.

மும்பையில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்தியிருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்க நீண்டகால குறிக்கோள்களுடன் உடனடியாக செயல்படுவது அவசியம்.தீவிரவாதிகளின் தாக்குதலிற்கு பின்னர் மிகுந்த துக்கமடைந்தேன். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. எனவே தான் கஜினியின் வெளியீட்டை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளேன்.

மும்பை தாக்குதலிற்கு பின்னர் எனது பாதுகாப்பை நான் கூட்டிக்கொள்ளவில்லை.

இவ்வாறு கூறினார். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரியெனவே படுகின்றது

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails