
இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு இந்தியர் காலிறுதிக்கு தகுதி பெற்றது அதுவே முதல் முறை. உலக ஜூனியர் சாம்பியன்(2008) பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ள இவர் இந்தியாவின் தற்போதைய ஜூனியர் சாம்பியனுமாவார்.
2008 ல் இளைஞர்களுக்கான காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.
டிசம்பர் 5, நிலவரத்தின்படி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆவது இடத்திலுள்ளார். இதன் மூலம் உலக தரவசிசையில் முதல் பத்து இடத்திற்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
எனது முந்தைய பதிவில் கூறியபடி, குழு போட்டியான கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தியாவில், நேவால், மில்கா சிங், செஸ் ஆனந்த், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிந்த்ரா போன்ற தனி மனித விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்தல் மிக அவசியமாகும்; அது இவர்கள் மேலும் உலக அரங்கில் சாதனை படைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment