May 05, 2009

கலைஞருக்கு இது தேவையா...?

தமிழகத்தில் எட்டு வருடங்களில் முதல் முறையாக அரசுப்பேருந்துகளில் பயணக் கட்டணத்தைக் 50% சதவீதத்திற்கும் கீழே குறைத்திருப்பதாக கூறி சென்னை,திருச்சி,மதுரை பேருந்துகளில் குறைவான பயணக்கட்டணம் மே 1,2 ஆகிய தேதிகளில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறை அமைச்சரான நேருவோ, கட்டணம் குறைப்பிற்கான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும்,சில வழித்தடங்களில் பேருந்துகளின் தரம் டீலக்சிலிருந்து சாதாரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டிருப்பதால்,அதனடிப்படையில் குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். உண்மை யாருக்கு தெரியும்!

இதனை அறிந்த தேர்தல் ஆணையம் கட்டணக் குறைப்பிற்கான உத்தரவை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு நேற்று(4.5.09) உத்தரவு இட்டது.

இவ்வாறு கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

ஏற்கெனவே இலங்கைப் பிரச்சினையில் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடி ஏதும் செய்யாத காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு இது மேலும் பின்னடைவே.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நலத்திட்டங்களையோ,சலுகைகளையோ அமல்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைககளுக்கு எதிரானது என்பது 70 வருடத்திற்கும் மேல் அனுபவம் உள்ள ஒரு முதல்வருக்கு தெரியாமல் போனது ஏனோ?

ஓட்டுகளைப் பெறுவதற்கு மக்களை நல்லாவே ஏமாத்துறீங்கன்னு மட்டும் புரிஞ்சுப் போச்சுங்க பெரியவரே.கலைஞரைப் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இந்த காமெடி எல்லாம் தேவைதானா!

நாங்கள் கொண்டுவரும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி தான்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails