
டெஸ்ட் ஆட்டம் இவர்களுக்கு பிடிக்கவில்லை போலும்...
எனது எண்ணங்களும் எழுத்துக்களும
அதாவது இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் விளம்பரப் படங்களில் நடித்து பணமும் புகழும் ஈட்டவே அணியில் இன்னும் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் எப்போதே அணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள் என்றும் சாடியிருந்தார். மேலும் இந்த மூத்த வீரர்களில் எவருடைய ஆட்டமும் தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறத்தலாக இல்லை எனவும் கூறியிருந்தார்.
இன்று மீண்டும் ஒரு வடஇந்தியன் சில மராத்திய கயவர்களால் அநியாயமாக ரயிலில் வைத்தே கொல்லப் பட்டிருக்கிறான். சில மாதங்களாகவே மகாராஷ்டிராவில் தொடர்ந்து வரும் வட இந்தியர்களின் மீதான இத்தகைய தாக்குதல் அங்கு தொழிலினிமித்தம் குடியேறியுள்ள பிற மாநிலத்தவரைப் பீதியடைய வைத்துள்ளது.பகிரங்கமாக நடத்தும் அவர்களின் இத்தகைய தாக்குதல்களுக்கு போலீசாரும் ஒத்துப் போகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.மகாராஷ்டிராவில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களில் பிற மாநிலத்தவருக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று வலியுறுத்தி வருகிறார்கள் ராஜ் தாக்கரே உள்ளிட்ட சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள்.அதே நேரத்தில் சுயமாக வேலையிலமர்ந்த கீழ்மட்ட தொழில்களில் இருக்கின்ற காவலாளிகள், டப்பா வாலாக்கள் என அறியப்படும் மதிய உணவு சப்ளையர்கள் 40 சதவீதத்திற்கும் மேலானோர் வட மாநிலங்களைச் சார்ந்தவர்களே.அவர்கள் மிகக் குறைந்த கூலி தருபவர்களுக்கும் வேலை செய்ய தயாராக இருப்பது தான் மராத்தியரை விட அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது.இதையும் கூட பொருக்காமல் அவர்களைத் தாக்கி வருகிறார்கள் மராத்தியர்கள்.வட மாநில குறிப்பாக பீகார், உத்திரபிரதேசத்தைச் சார்ந்த டாக்சி ஓட்டுனர்கள் தாக்கப் படுகின்ற சம்பவங்களும் அங்கொன்றுமாக இங்கொன்றும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது.
இந்நிலையில் கலவரத்தைத் தூண்டும் விதம் மேடைப் பேச்சு நடத்தியதற்காக கடந்த வாரத்தில் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்ட போது (எப்போதோ கைது செய்யப்பட வேண்டியவர்) போலீசாரால் அதிக மரியாதையுடன் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார், ஒருவர் ராஜ் சாப் என அழைத்துள்ளார், வேறொருவரோ காரின் கதவை அவருக்காக திறந்து கொடுத்துள்ளார், இதற்காக அப் போலீசாராரின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தைத் தூண்டும் நாணமில்லா அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தரும் இவர்களைப் போன்ற போலீசார் எங்கே அன்றாடம் அல்லலுறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு தரப் போகிறார்கள். வடமாநிலத்தைச் சார்ந்த கீழ்மட்ட வேலையிருப்பவர்களை மட்டுமின்றி மேல்மட்டத்தவரையும் பகிரங்கமாக அவர்களின் சொந்த மாநிலத்திற்குத் திரும்பிப் போகச் சொல்லும் அளவிற்கு மராத்திய மதம் பிடித்திருக்கிறது அவர்களுக்கு.(நடிகர் அமிதாப்பின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை) எனினும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற மேல் மட்டத் தொழில்களில் ஈடுபடுவோர் 55 சதவீதத்திற்கும் மேலானோர் தென்னிந்தியர்களே அதிலும் குறிப்பாக தமிழர்களும்,கேரளத்தினருமே.இவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிப் போகிற ஒரு நிலை வருமென்றால் அவர்களின் பிழைப்பு ஒருபுறம் கேள்விக்குறி என்றாலும் மகாராஷ்டிராவின் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.இதனை அறிந்தே white color job எனப்படும் கணிப்பொறி, மருத்துவம் போன்ற துறைகளின் பணியிலிருப்போரிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்களுக்கும் கீழ்மட்டத் தொழில் செய்பவர்களின் நிலைமை தான்.
இவை அனைத்தும் மராத்தியருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்று கபட நாடகமாடி மராத்தியர்களின் ஓட்டு வங்கியை அடைய இவர்கள் அரங்கேற்றும் நாடகம் என்பதாகவே நான் கருதுகிறேன்.பட்டப் பகலில், பொதுமக்கள் மத்தியிலேயே வெறித்தனம் காட்டும் இவர்கள் மீது மகாராஷ்டிர அரசு காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்திருப்பது கேள்விக்குரிய விஷயம்.தேர்தல் நெருங்குவதால் தான் இந்த கண் துடைப்பு என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இத்தகைய போக்கு தொடருமானால் மகாராஷ்டிராவில் வரலாறு மீண்டுமொரு 1992-1993 ஐ சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
லங்காவில் இன்று உயிர் துச்சமாகி விட்டது.திரு.மணிரத்னம், கவிப்பேரரசு.வைரமுத்து, இசைப்புயல்.ரஹ்மான் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு
சமர்ப்பித்த இப் பாடலை நான் மீண்டும் சமர்ப்பிக்கிறேன்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய மண்ணிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் பாண்டிங். இந்திய மண்ணில் சதமடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என டெஸ்ட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள உலகின் தலைசிறந்த வீரரான பிரையன் லாராவே நேற்று கூறியிருக்கிறார் ஏனெனில் அவரும் இந்திய மண்ணில் டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்தது கிடையாது.பாண்டிங்கினை குறித்து எழும்பிய அனைத்து வினாக்களுக்கும் அவரது 123 ஆல் பதிலளித்திருக்கிறார் அவர். அணித்தலைவராக அவர் அடித்திருக்கும் 16 ஆவது சதம் இது.எந்த அணித்தலைவரும் அணித்தலைவராக இருக்கும் போது இத்தனை சதம் அடித்தது இல்லை.தொடர்ந்து இந்த ஆட்டத்தை தொடருவாரானால் சச்சினின் சாதனையான அதிக சத சாதனையையும் அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையையும் இவர் முறியடிக்கக் கூடும்.அதிக ஓட்டங்கள் குவித்த முதல் 10 வீரர்களில் அதிக சராசரி (58.74) இவருடையது தான்.
எனினும் சச்சினின் ஆட்டத்தை எவரும் அத்தனை எளிதில் குறைத்து மதிப்பிடவியலாது, சச்சின் தனது ஆட்டத்தை ஆரம்பித்த காலங்களில் மெக் கிராத், மெக் டெர்மட், வார்னே, வால்ஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அம்ப்ரோஸ், ஆலன் டொனால்டு, லூயிஸ், வாஸ் போன்ற மிகச் சிரமமான பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. இன்றோ...டேல் ஸ்டெயின், அக்தர், லீ போன்ற வெகு சிலரே மட்டையாளர்களுக்கு சிரமம் கொடுக்கிறார்கள், இதுவும் பாண்டிங்கிற்கு ஒரு வழியில் அனுகூலம் தான்.
எதுவாயினும் 123 காக பாண்டிங்கிற்கு வாழ்த்துக்கள்
கிறிஸ்தவமென்பது மதமல்ல
மதத்தினால் மதம் பிடித்து இருக்கிறது இங்கு சிலருக்கு, கிறிஸ்தவமென்பது மதமல்ல அது பரத்தினை அடைய உதவும் ஒரு மார்க்கமென்பது எனது கருத்து.
பெயர் கிறிஸ்தவர்கள் இன்னும் மதத்திலேயே நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள்...அதன் விளைவாகத் தான் எப்போதுமில்லாத தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கண்களுக்கு இம்மை மாத்திரமே தெரிகிறது,மறுமை என்றால் என்னவென்கிறாகள்.பகிரங்கமாக பதிலுக்கு பதில் தாக்குவோமென்று அறிக்கை விடுகிறார்கள் சில கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவம் அதைத் தான் போதிக்கிறதா? இல்லை.
அது போன்ற பெயர் கிறிஸ்தவ தலைவர்களால் பாதிக்கப்படுவது,ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமூகமே.இதுவே ஒரிசாவின் கன்னியாஸ்திரியின் அவலத்துக்கும் அதனைத் தொடர்ந்த தாக்குதலுக்கும் காரணம் என்பதாக தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
அக்டோபர் 2சுதந்திரமாக கயவர்கள் செயல்படவும்,
சுதந்திரமாக தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யவும்,
சுதந்திரமாக ஊழல் செய்யவும்,
சுதந்திரமாக நாட்டைக் காப்பவர்கள் (நாற்காலி காப்பவர்கள்) அதினிமத்தம் ஊதிகை ஈட்டவும்,
சுதந்திரமாக நாட்டை குப்பை மேடாக்கவும்,
சுதந்திரமாக வலுவில்லாதவனை தாக்கவும்,
சுதந்திரமாக எளிவர்களை எள்ளி நகையாடவும்,
சுதந்திரமாக கொள்ளையிடவும்,
சுதந்திரமாக மதத்தின் பெயரால் மதம் கொள்ளவும்,
சுதந்திரமாக மொழியின் பெயரால் மக்களை ஒடுக்கவும்,
சுதந்திரமாக சௌம்யா விஸ்வநாதன் போன்றோரை கொலை செய்யவும்
தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது...
