எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
எனது எண்ணங்களும் எழுத்துக்களும
எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
நான்கு தினங்களுக்கு முன்னதாக ஓமன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது;நான் தூக்கம் கலைந்து ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது என்ற கேள்வியோடு கண் விழித்துப்பார்க்கையில் உடன் பயணித்த 90 % (ஆண்) பயணிகள் வெளியிலே தங்கள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில மணித்துளிகளுக்குப் பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள் அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.
ரங்க்தே பசந்தி உள்ளிட்ட நாட்டுப்பிரச்சினைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில் நடித்த ஹிந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் இன்று பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அளித்த பேட்டியில் பல உண்ர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவரளித்த பேட்டியின் ஒருசிலபகுதியின் தமிழாக்கம் இங்கே.(முன்னரே சில இஸ்லாம் அமைப்புகள் வேண்டிக்கொண்டபடி மும்பையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புத்துணி அணிந்திருந்தார்)
ஹரியானாவைச் சார்ந்த பதினெட்டே வயதான பேட்மிண்டன் மங்கை சைனா நேவால் (Saina Nehwal), இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை (Most promising player of the year 2008) என்று சியோலில், அகில உலக பேட்மிண்டன் அமைப்பால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். 
முட்டம் கடற்கரை
விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி
சூர்ய அஸ்தமனம், கன்னியாகுமரி
கன்னியாகுமரியின் மற்றுமொரு கோணம்
திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனை,பத்மநாபபுரம்,தக்கலை
திட்டுவிளை மலையடிவாரம்
ரப்பர் தோட்டம், கீரிப்பாறை
திற்பரப்பு
சுசீந்திரம் கோவில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
தென்னைகளினிடையே எட்டிப்பார்க்கும் கதிரவன், கொட்டாரம்இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.
ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.
இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.
உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.
இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.
திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.
இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.
நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar
