எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
எனது எண்ணங்களும் எழுத்துக்களும
எனது முயற்சியில் ஒரு கிறிஸ்துமஸ் வீடியோ.
"சமாதான பிரபு இயேசுகிறிஸ்து பிறந்த நன்னாளில்
உலகம் முழுதும் சமாதானம் நிலவ பிரார்த்திப்போம்"
நான்கு தினங்களுக்கு முன்னதாக ஓமன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது;நான் தூக்கம் கலைந்து ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது என்ற கேள்வியோடு கண் விழித்துப்பார்க்கையில் உடன் பயணித்த 90 % (ஆண்) பயணிகள் வெளியிலே தங்கள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில மணித்துளிகளுக்குப் பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள் அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.
ரங்க்தே பசந்தி உள்ளிட்ட நாட்டுப்பிரச்சினைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில் நடித்த ஹிந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் இன்று பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அளித்த பேட்டியில் பல உண்ர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அவரளித்த பேட்டியின் ஒருசிலபகுதியின் தமிழாக்கம் இங்கே.(முன்னரே சில இஸ்லாம் அமைப்புகள் வேண்டிக்கொண்டபடி மும்பையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புத்துணி அணிந்திருந்தார்)
ஹரியானாவைச் சார்ந்த பதினெட்டே வயதான பேட்மிண்டன் மங்கை சைனா நேவால் (Saina Nehwal), இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை (Most promising player of the year 2008) என்று சியோலில், அகில உலக பேட்மிண்டன் அமைப்பால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். 
முட்டம் கடற்கரை
விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி
சூர்ய அஸ்தமனம், கன்னியாகுமரி
கன்னியாகுமரியின் மற்றுமொரு கோணம்
திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனை,பத்மநாபபுரம்,தக்கலை
திட்டுவிளை மலையடிவாரம்
ரப்பர் தோட்டம், கீரிப்பாறை
திற்பரப்பு
சுசீந்திரம் கோவில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
தென்னைகளினிடையே எட்டிப்பார்க்கும் கதிரவன், கொட்டாரம்இசைப்புயல் என்று வர்ணிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கடந்த 15 வருடமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தான் திரு.ஸ்ரீதர் அவர்கள். ரஹ்மானுடன் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நிலையிலும் மனவருத்தம் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
ரஹ்மானின் முதல் சினிமாவான ரோஜாவிலிருந்து தற்போதைய (அமீர்,அசின் நடித்துள்ள) ஹிந்தி சினிமாவான கஜினி வரை தனது கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்.கஜினியின் இறுதி இசை வடிவமைப்பிற்காக பல நாட்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் ரஹ்மானுடன் பணியாற்றிருக்கிறார்.
ரஹ்மானின் மேடைக் கச்சேரிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரது பங்கு மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஹ்மானின் வலது கை எனவும் கூறலாம் திரு ஸ்ரீதர் அவர்களை. கோடம்பாக்கத்திலுள்ள ரஹ்மானின் பஞ்சதன் ஒலிப்பதிவு மையத்தில் மற்றொரு ஒலி அமைப்பாளர் திரு.சிவகுமார் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்.
இந்திய இசை உலகில் டிஜிட்டல் (DTS) இசை உத்தியை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.
உலகப்புகழ் வாய்ந்த இசைக்குழு Beatles உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜாக்கீர் உசேன், பண்டிட் ரவி சங்கர், ஜார்ஜ் ஹாரிசன் போன்ற உலக பிரபலங்களுடனும் சிறப்பான பணியாற்றிருக்கிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த ஒலி பொறியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.மஹாநதி, லகான், தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார் திரு.ஸ்ரீதர் அவர்கள்.
இதுவரை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் மஹாதேவன், ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரஹ்மானின் குழுவில் நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் நபர்களில் திரு.ஸ்ரீதர் அவரும் ஒருவர்.
திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரசிகர்கள் இவரைப்போன்ற கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் முக்கியத்துவமளித்தால் இவர்களும் காலத்தால் அளிக்கப்படமுடியாத சாதனையாளர்கள் ஆவதில் சந்தேகமில்லை.
இழப்பால் வருந்தும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்போம்.
நன்றி http://www.aamirkhan.com/blog மற்றும் http://en.wikipedia.org/wiki/H._Sridhar

மும்பையில் நிகழ்ந்த கோர சம்பவத்தின் பின் அரங்கேறும் ஒவ்வொரு அரசியல் காட்சிகளும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தான் ஏற்படுத்துகின்றது.இந்த இக்கட்டான சமயத்திலாவது இந்திய அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து விடமாட்டார்களா என ஏங்கிய ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் இந்திய அரசியல்வாதிகள் நாங்கள் என்றுமே ஓரணியில் நிற்கப்போவதில்லை என ஓங்கி குரல் கொடுத்திருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்திருக்கின்றனர்.
மேஜர்.உன்னிகிருஷ்ணன் அவர்கள் தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார்.வேறு சில கமாண்டோக்களும் காயமடைந்திருக்கிறார்கள்.இவர்கள் தான் நம் நாட்டைக் காக்கின்ற உன்னதர்களேயன்றி நாற்காலி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில்லை என ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக மராத்தியர்களும் புரிந்து கொள்ள வேண்டுதல் மிக அவசியம்.
காதல் சுகமானது என்றாய்
உன் பிரிவிலல்லவா புரிந்தேன் அது எத்தனை சோகமானது என்று.
காதல் சுகமானது தான்;
கல்யாண கால்கட்டிற்கு பின்னல்லவா தெரிகிறது
காதல் (குடும்ப) சுமையென்று!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் இன்று இங்கிலாந்து மீண்டும் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது(இதனை ஒரு வெற்றி என என்னால் கருத இயலவில்லை)இதன் மூலம் இந்திய அணி 4-0 என இந்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.அதோடு அணித்தலைவராக கெவின் பீட்டர்சனின் தெற்கு ஆசிய நாடுகளின் முதல் சுற்றுப்பயணமே தோல்வியில் ஆரம்பித்துள்ளது.
ஆங்கில பாப் உலகின் ராஜா என அழைக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மிக்கயீல் (Mikaeel) என தனது பெயரை மாற்றியிருக்கிறார் அதோடு இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இஸ்லாம் மதத்தை தழுவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னய்யா இது டக்காம் லூசாம் ஆட்ட நடுவர்கள் ஊடால பேசிக்கிறாங்க, திடீர்னு பாத்தா வெளாடிகிட்டு நின்ன பசங்க எல்லாம் ரூமுக்குள்ள போய்ட்டானுக.அப்புறம் பாத்தா ஹர்பஜன் கிட்ட பேட்டி எடுக்குறாரு மூத்தவரு ரவி சாஸ்திரி.அப்புறம் தான் புரியுது இந்தியா ஜெயிச்சுபுட்டாங்கனு! இது என்ன கிரிக்கெட் தான இல்ல வேற என்னவுமா?இங்கிலீஸ் அணிய விட நம்ம ரன் கொஞ்சமில்ல அடிச்சு இருக்கோம் அப்புறம் எப்படி இப்படி நம்ம ஜெயிச்சுட்டோம்னு நண்பர்கள் பல பேருக்கு புரியவேயில்லை.(இது தான் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விளையாட்டோ?)
டக்வர்த்-லூயிஸ் முறையில் இந்திய அணி இன்று கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மைதானத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது டக்வர்த்-லூயிஸ் வரையறையின் படி நிறைவுபெற்ற 40 ஆவது ஓவரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 16 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்த படியால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் ஒளிவிளக்கு இருந்தும் அதனை உபயோகிக்க
இயலவில்லை இந்த இரு அணிகளுக்கும்.ஒவ்வொரு ஆட்டம் துவங்கும் முன்னர் செயற்கை ஒளியை ஆட்டத்தினிடையே தேவைப்பட்டால் உபயோகிப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை இரு அணி தலைவர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவு ஆட்டம் துவங்கும் முன்னர் எடுக்கப்பட வேண்டும்.ஆட்டத்தின் இடையே முடிவெடுக்கவியலாது.
கான்பூரில் இது போன்ற தட்பவெப்ப காலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும் என போட்டி அமைப்பாளர்கள், ஆட்ட நடுவர் இந்திய வீரர்கள் அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.இங்கிலாந்து அணியிலும் சிலர் அறிந்திருக்கலாம் அறியாமலுமிருந்திருக்கலாம்.
தோனி ஆட்டம் துவங்கும் முன் டாஸ்(பூவா தலையா) இடும் போதே ரவி சாஸ்திரிக்கு அளித்த
பேட்டியில் பனிமூட்டம் குறித்தும் டக்வர்த்-லூயிஸ் முறை உபயோகப்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.(இத்தனைக்கும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களிலிருந்து ஒரு ஓவரும் குறைக்கப்பட்டது)கான்பூரின் தட்பவெப்பநிலையைக் குறித்து நன்கு அறிந்திருந்த தோனி ஏன் செயற்கை ஒளிவிளக்கு பயன்படுத்துவது குறித்து இங்கிலாந்து அணி தலைவர் பீட்டர்சனுடன் விவாதிக்கவில்லை?இது தான் ஒரு வீரனுக்கு அழகா?பீட்டர்சன் இது குறித்து கேட்டாரா என தெரியவில்லை.
ஆனால் உணவு இடைவெளியின் போது நடுவர்களிடம் உணவு இடைவேளை நேரத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார்.அதற்கு ஆட்ட நடுவர்கள் அப்படி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.(ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படி கூறவில்லை என Cricinfo தெரிவிக்கிறது)
தட்பவெப்பநிலை குறித்து நன்கு அறிந்திருந்த நடுவர்கள் பூவா தலையா போடவே 15 நிமிடம் தாமதம் காட்டியிருக்கிறார்கள்.பூவா தலையாவிற்கு பின்னரும் ஆட்டம் துவங்க 20 நிமிட கால தாமதம்.உணவு இடைவேளை 30 நிமிடம் வேறு. இப்படி நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் போதிய வெளிச்சம் இல்லையென்று குண்டைத் தூக்கிப்போட்டது ஏற்றுக் கொள்ளும் படியில்லை.
இதில் சந்தோசம் இந்திய அணி வீரர்களுக்கும்,போட்டியை போட்டியாக பார்க்காத சில ரசிகர்களுக்கு மட்டுமே.நிச்சயமாக இங்கிலாந்து அணி சந்தோஷப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்ட விமர்சகர்களான ரவி சாஸ்திரி,டேவிட் லாயிட் உள்ளிட்ட பலரும் அதிருப்தியே தெரிவித்திருக்கிறார்கள்.
செயற்கை ஒளிவிளக்கு உபயோகிப்பது பற்றிய முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணித்தலைவர்களிடம் அளிக்காமல் அதனைக் கட்டாயப்படுத்த வேண்டுமென கருத்து சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி அவர்கள்.அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
ரசிகர்கள் அவ்வளவு சிரமமெடுத்து ஆட்டத்தை ரசிக்க குழுமியிருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது என்றால் ஏமாந்து போயிருக்கமாட்டார்களா.இத்தனைக்கும் இன்று நடந்த போட்டியில் மைதானம் 30 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
யாரை குற்றம் சொல்வது! செயற்கை ஒளிவிளக்கைக் குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்காத சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையா? இல்லை தெரிந்திருந்தும் பீட்டர்சனுடன் விவாதிக்காத தோனியையா? இல்லை கால தாமதம் செய்ய காரணமாயிருந்த ஆட்ட நடுவர் ரோஷன் மஹானமாவையா?(மைதான நடுவர் இல்லை)
Nelson Mandela, The Great President of South Africa and Nobel Laureate
Martin Luther King Jr
APJ.Abdul Kalam, Former India President and Scientist
Abrahah Lincoln, Former US President
Barak Hussein Obma-US President Elect 2008
Kofi Annan, Former UN Sec.General
Prof.Solomon Paappaya
கருப்பு தங்கம் Kavipaerarasu Vairamuthu, Lyricist and Poet
ARR
Condoleeza Rice, US Secretary of State
Michael Johnson, USA, 4 time Olympic Gold Medallilst
Carl Lewis, USA, 9 time Olympic Gold Medalist
Jesse Owens, USA needs no introduction
Mohd Ali, Boxer
Makelele, French Footballer and Chelsea
Michael Jordan the best basket ball player ever
Mahesh Bhupathi, Indian Tennis Player
Shaun Wright Philips of England
Brian Lara of the West Indies
Nicolas Anelka, French footballer and Chelsea
Michael Jackson, king of POP music
Pele the Great football legend, Brazil
Holyfield, Boxer
Leander Paes, Olympic Bronze Medallist, Indian Tennis
Heskey with David Beckham, English Footballer
Yuvan Shankar Raja, Musician and Vocalist
Ashley Cole of the England Football and Chelsea
Samuel Eto of the Cameroon Football and Barcelona
Tyson, The Boxer
Tiger Woods of the USA Golf
Ronaldinho Of the Brazil Football
Richie Richardson of West Indies Cricket