May 08, 2020

ஏன் வீழ்ந்து கிடக்கின்றோம்!

'மன்னன் எவ்வழியோ
மக்களும் அவ்வழி' என்றார்கள் மன்னராட்சிக் காலத்தில். அது தற்போது ஓரளவுப் பொருந்திப் போனாலும், தற்போதைய நம் வாழ்வியலுக்கு அரசை மட்டுமே குறை சொல்லி விட முடியாது.

சிந்திக்காத மக்கள் கூட்டம், எல்லாவற்றிற்கும் தலையாட்டினர் அன்று!

இன்றோ, தகவல்களைப் பெறுவதற்கும், கற்பதற்கும், அதிலிருந்து சுயமாக சிந்திப்பதற்குமான சூழல் நமக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? என்பது ஒருபுறம்!

மறுபுறம்...

எந்த தலைமுறையும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான எவ்வித செயலையும் சுயமாக கற்றுக் கொள்வதில்லை. அது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் இப்படியானவர்களிடமிருந்து கற்பவையே பெரும்பாலும் நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது.

நமது குணங்களைத் தீர்மானிப்பதில் மேற்குறிப்பிட்டோருக்குப் பெரும்பங்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள், நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் நமக்கு எவ்விதக் கருத்துகளை நமக்குக் கடத்தினர்? கடத்திக் கொண்டிருக்கின்றனர்? எவ்விதமான வாழும் சூழலை நமக்கு முன் வைத்தனர்? வைத்துக் கொண்டிருக்கின்றனர்?

இக்கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியிருக்கிறது நமது டாஸ்மாக் வேதனைகள் 😥

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails