May 03, 2020

அரிதாரம் பூசிய நியோ வாழ்வியல்

(பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிறுகதை)

.... என்னங்க! நல்லாச் சொல்லுங்க இந்த பையனுக்கு, 'எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றான்! எப்பப்பாரு விளையாட்டுன்னு இருக்கான்' எப்ப தான் நல்ல புத்தி வருமோ தெரில!

'நீதிக் கதைகள், வேதாகமக் கதைகள், நீதிமொழிகள எடுத்துப் படிடா' அப்ப தான் நல்ல புத்தி வரும், கூடவே நல்லது செய்யத் தோணும் ஒனக்கு, அதிகாரம் அதிகம் பூசிய அக்கறையில் அப்பா!

...தொண்டைக்கு வலிக்காத அளவில் சரிப்பா என்றான் பையன்.

சரி... சரி... நான் இங்க வச்சிருந்த அந்த கவர் எங்கடி! கொஞ்ச நேரமா தேடுறேன், காணவே இல்ல!

அதுல, அப்டி என்னங்க இருக்கு? இப்டி பதட்டப்படுறீங்க!

என்ன இருக்காவா! அதுல தாண்டி நாளைக்கு நாம கட்டப் போற புது பில்டிங்கோட அப்ரூவ்ட் ப்ளான் இருக்கு.

என்னங்க சொல்றீங்க! அப்ரூவல் கிடைக்கலன்னீங்க!

அதெல்லாம் வாங்கியாச்சி, காச இறைச்சா இங்க என்ன வேணா நடக்கும்னு ஒனக்கு தெரியாதா! சரி, கவர் எங்க அதச் சொல்லு.

நான் தான் பீரோல எடுத்து வச்சிருக்கேங்க, இந்தாங்க.

அ..ப்..பா..டா... இப்ப தான் நிம்மதி! சரி சரி, நான் இந்த ப்ளானோட ரெண்டு காப்பி எடுத்துட்டு இப்ப வந்துர்ரேன்.

'... என்ன இவ போன் எடுக்க இவ்ளோ நேரம்'

...ம்ம்ம்... ஹலோ, எடி ஜெனிபரு, நேத்தைக்கு, ஒன்னயும் காணோம் ஒன் குடத்தயும் காணோம்!

... ஊர்ல தான இருக்கீங்க!!

ஆமாக்கா, ஊர்ல தான் இருக்கோம், அது ஒண்ணுமில்லக்கா, நீங்க போட்ட மாதிரியே நாங்களும் மண்ணுக்கடில பைப்ப போட்டு மெயின் லைன்ல மாட்டிட்டோம், இப்ப தண்ணிக்கு வெளிய வர வேணாம்ல.

... ஓ, அப்டியா கத, பரவாயில்லயே!! உங்களுக்கும் நல்ல யோசனை லாம் வந்திருக்கே!!

... சரி சரி, அவர் வர நேரமாச்சி, சர்ச்சுக்கு கிளம்பணும்... அப்புறம் பேசுறேன், பா...ய்!

... அப்பா சொன்ன நீதிமொழிகளை படித்துக் கொண்டிருக்கிற மகன்,

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்: பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன் (நீதிமொழிகள் 8:13)

என்பதில் நிறுத்துகிறான்.




No comments:

Post a Comment

Related Posts with Thumbnails