September 12, 2020

நீட் எனும் தமிழனத்துவேசம்

 மோனிஷா, விக்னேஷ், ஜோதிஸ்ரீ என இன்றளவும் தொடரும் இந்த ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும், சொல்லவொண்ணா துயரங்களுக்கும் பின்னால் இருப்பது அப்பட்டமான வாக்கரசியலும், தமிழனத்தின் மீதான வன்மமும் மட்டுமே. 


முயன்று முயன்று ஒரு தருணத்தில் நமக்கே என்னடா இது என்று வெறுப்பும், மன அழுத்தமும் ஒரு சேர தாண்டவமாடும். 


அப்படியெனில் 1176/1200 மதிப்பெண் எடுத்த அனிதாவின் மன நிலைமையை சற்றும் ஊகித்து கூட நம்மால் பார்க்கவியலாது. 


எத்தனை நம்பிக்கையோடு அவர் உச்ச நீதிமன்றத்தின் வாயிலில் காத்திருந்தார் 💔



நம் தமிழ் பிள்ளைகளை இனியும் இழத்தல் கூடாது. 


அவர்களுக்கு சொல்ல வேண்டியது இவைகளை மட்டும் தான்...


' நம் தலையெழுத்து இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்தது '


 ' இங்கு நீதி என்பது விலை கொடுத்து வாங்கப்படுவது '


' நீ தோற்றாலும் பரவாயில்லை; எங்களைத் தோல்வியில் தள்ளி விடாதே ' 


' என்ன நிகழ்ந்தாலும் உன் பக்


கம் நிற்கிறோம் ' அன்பு குழந்தைச் செல்வங்களே!




No comments:

Post a Comment

Related Posts with Thumbnails