அல்பேனிய நாட்டு குடிமகளாக பிறந்து இந்திய குடிமகளாக இறந்த ஒரே பெண்மணி அநேகமாக Agnes Gonxha Bojaxhiu என்ற தெரசாவாக மட்டும் தான் இருக்க முடியும்.
அந்நிய நாட்டில் பிறந்தவராயிருந்தாலும் இந்திய நாட்டில் ஆதரவற்றோருக்காய் அவர் செய்த அரும்பணிகளை நாம் அந்நிய படுத்தி விட முடியாது.
இன்னல்கள் பலவற்றின் இடையிலும் அனாதைகளுக்காக அயராது உழைத்த ஆக்னஸ் @ தெரசாவின் கனவு சாதி, சமய, இன பாகுபாடின்றி அன்பையும் அரவணைப்பையும் அளிப்பது மட்டுமாகவே இருந்தது.
ஒருமுறை நன்கொடை வசூலித்து கொண்டிருந்த அன்னை தெரசாவின் கரங்களில் ஒருவர் துப்பியிருக்கிறார். தெரசாவோ அதனை துடைத்து விட்டு "இதனை நான் வைத்துக் கொள்கிறேன்... பசியிலிருக்கும் அனாதைகளுக்காக உதவி ஏதும் செய்யங்கள் என மீண்டும் கை நீட்டியிருக்கிறார்.
அத்தனை அரும்பணிகளை ஆற்றிய பின்னர் கூட.... தன்னைக் குறித்து கூறும் போது "அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்கிறார்"
தெரசா அவர்களின் அறப்பணி இந்தியர்களை சோம்பேறி ஆக்குகிறீர்கள்; மீண்டும் பிச்சை எடுக்க தூண்டுகிறீர்கள்; போன்ற பல கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை...
பசியிலிருப்பவனுக்கு மீனை கொடுக்காமல் மீனை பிடிப்பது எப்படி என சொல்லி கொடுக்கலாமே என்ற கேள்வி ஒன்றிற்கு "அவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்ற மனநிலையை நான் உருவாக்குகிறேன்" ; உயர்நிலைகளில் இருக்கிற நீங்கள் மீன்பிடிக்க (வேலைவாய்ப்பினை) ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியிருக்கிறார்.
தான் செய்த பணிகளில் தெளிவாக இருந்த தெரசாவே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் (அவரில்) இருப்பதை குறித்த பல குழப்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று .
அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே புகைப்படங்களாய்.

ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும் தான், திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார்.

1928 ல் அயர்லாந்தில்... Sisters of Loretto எனப்படும்(இந்தியாவில் பணி செய்ய பயிற்றுவிக்கப்படும் இடம்) குழுவில் சேர்ந்தார்.

1931 ல் தனது பெயரை தெரசா என மாற்றி கொண்டார்.
1931-1946 வரை கல்கத்தாவில்(St.Mary's High School) ஆசிரியையாக பணியாற்றினார்.
1944 ல் Principal ஆக பதவி உயர்வு பெற்றார். அதே வருடம் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டார்.

1946 ல் டார்ஜிலிங் பகுதிக்கு ஓய்விற்காக செல்கையில் ஏழைகளுக்காக பணி செய்ய வேண்டுமென இறைவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.

1948 ல் இந்திய குடியுரிமை பெற்றார்.


1952 ல் Nirmal Hrudai என்ற முதியவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பை அமைத்தார்.
பத்மஸ்ரீ, பாரத ரத்னா, புருசெல்ஸ் கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம், அமைதிக்கான நேரு பரிசு என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

1985 ல் அமெரிக்க அதிபர், ரொனால்ட் ரீகனிடமிருந்து Presidential Award Of Freedom என்ற விருதை பெறுகிறார்.


1985 ல் அமெரிக்க அதிபர், ரொனால்ட் ரீகனிடமிருந்து Presidential Award Of Freedom என்ற விருதை பெறுகிறார்.
1991 ல், The Salvation Army என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உலக தலைவர் ஈவா பரோஸ் அம்மையாரை சந்திக்கிறார்.
No comments:
Post a Comment