December 24, 2020

வலிந்து திணிக்கப்பட்ட மரணங்கள்!

 காஞ்சிபுரம் சரண்யா வில் துவங்கி, மதுரவாயல் பிரிசில்லா - இவாலின்; விழுப்புரம் ரெமி; திருச்சி யஸ்வந்த் என தொடரும் மரணங்கள் நமது உள்ளாட்சி கட்டமைப்புகளின் செயலற்ற தன்மையைப் பறைசாற்றுகின்றன.


இவை எல்லாம் கடந்த இருபது நாட்களுக்குள் நிகழ்ந்த சோகங்கள்.

இந்த ஐந்து இழப்புகளும் மூடப்படாத கழிவு நீர் தொட்டிகளால் ஏற்பட்டவை.

நிர்வாக அலட்சியங்கள் மக்களைப் படுகொலைகள் செய்திருக்கின்றன. இதில் டிஜிட்டல் இந்தியாவிற்கு ஒன்றும் குறைவில்லை!

ஆறு, குளங்களில் குளிக்கையில் எதேச்சையாக மூச்சுக் குழாயில் நீர் சென்று விடும் போதே நாம் பெரும் அவதிக்குள்ளாகி விடுகிறோம்.

நல்ல நீர், மூச்சுக் குழாயில் செல்வதற்கே அந்த நிலை என்றால், நெடி வீசும் கழிவு நீர் மூச்சை அடைக்கையில் என்ன பாடு பட்டிருக்கும் அந்த உயிர்கள். சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

திருச்சியில் நேற்று காலமான யஸ்வந்த் ற்கு ஐந்தே வயது! 😥

சொச் பாரத் என்கிற வெற்று வாக்கு அரசியல் ஒருபுறம்; அந்த வெற்று வாக்கு அரசியலுக்கு ஒத்து ஊதி அண்டிப் பிழைக்கும் அடிமைக் கூட்டம் மறுபுறம்!

இவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டதற்கு நாம் தான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது! 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails