December 05, 2020

மழை - மிதப்பு - மெத்தனம்

 சென்னை மாதிரியான பெருநகரங்கள் என்றில்லை, முறையான நீர் வடிகால் அமைப்புகள் இல்லாத எந்த நகரமும்/ கிராமமும் சிறு மழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் செய்யும். 

சென்னையில் சில இடங்களில் வடிகால் அமைப்புகள் இருந்தும் நீர் வடியாமல் இருப்பதற்குக் காரணம், பிளாஸ்டிக் (நெகிழி) பைகளையும், குவளைகளையும் வீசும் மக்களின் முட்டாள்த்தனமும் அலட்சியமும் தான். 

கூடவே, கழிவுகளை நேரத்திற்கு நேரம் அப்புறப்படுத்தாமல் இருக்கும் பணியாளர்களின் ஏனோதானோ மன நிலையும் வடிகால்கள் அடைப்பிற்கு பெருங்காரணம்.

ஆண்டாண்டு காலமாய் சிறு மழைக்கே நகரம் மிதக்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் அதனைத் தடுக்கவும், முறையான திடக் கழிவு மேலாண்மை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டிய அரசு அவற்றை செயல்படுத்தாமல் இருப்பதே! 

மக்களின் சுயநலன், அரசின் மெத்தனம், பணியாளர்களின் அலட்சியம் இவை மாறி, மக்கள் - பணியாளர்கள் - அரசு ஆகிய மூன்றும் பொதுநலன் என்கிற புள்ளியில் இணைந்து செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறுமழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் போகிறோம். 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails