February 25, 2009

விமான விபத்துகள் சகஜமாகி விடுமா?

கடந்த இரண்டு மாதங்களினுள் இன்றோடு மூன்றாவது முறையாக விமான விபத்தை செய்திகளின் வழியே கேட்க நேரிடுகிறது.விமானப் பயணம் என்றாலே பலருக்கு கிலியை ஏற்படுத்தும். (குறிப்பாக முதல் பயணம்) இன்றைய விபத்துச் செய்தி இந்த பயத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன்.

ஜனவரி 15 அன்று அமெரிக்க விமானம் US Airways Airbus A320 விண்ணேறிய சில நிமிடங்களில் பறவைகள் மோதியதால் எஞ்சின் பழுதடைந்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.விமானியின் சாதுர்யத்தால் ஹட்சன் ஆற்றில் இறக்கப்பட்டு பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிப்ரவரி 12,2009 ல் அமெரிக்க விமானம் Continetnal Express-3407 ஒன்று தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க்,பஃபல்லோ என்ற நகரின் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.அதில் விமானி உட்பட பயணம் செய்த 48பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர்.

விமானத்தின் பைலட் விமானத்தை குறிப்பிட்ட வரையறைக்கும் தாழ்வாக விமானத்தை இறக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.பனிமூட்டம் காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் முன்னர் Good night என்பது வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்ட விமானி, விமானம் விபத்துக்குள்ளாகும் என கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்(விமானியின் இறுதி உரையாடல் இங்கே)

இன்று Turkish விமானம் Flight TK 1951 நெதர்லாந்,ஆம்ஸ்டர்டமில் தரையிறங்க சில வினாடிகளுக்கு முன்னர் மூன்றாக உடைந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 9பேர் மரணமடைந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இப்படியாக விபத்துகள் தொடர்ந்து நிகழுமேயானால்,பேருந்து விபத்துகளை போன்று விமான விபத்துகளும் சர்வ சாதாரணமாகி விடும் என்றே தெரிகிறது.

ஹட்சன் விபத்தை பார்த்ததுமே எனக்கு விமானத்தில் பயணம் செய்ய கிலி ஏற்பட்டது.அதன் பின்னரும் இருமுறை பிரயாணம் செய்தாகிவிட்டது உயிரை கையில் பிடித்துக் கொண்டு.

என்ன செய்வது எதிர்பாராததை எதிர்பார்த்து தானே ஆக வேண்டும்!

புகைப்படங்கள் நன்றி: bbc

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails